tamilnadu

கொரோனா தொற்றை கண்டறிய உதகையில் புதிய பரிசோதனையகம் துவக்கம்

உதகை, ஜூலை 11- கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் சளி மாதிரிகளை சோதனை செய்து நோய் தொற்றினை கண்டறிய பரிசோதனையகம் உத கையில் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் நீலகிரி மாவட்டத் தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச் சியாக நீலகிரி அரசு மருத்துவகல்லூரி வளாகத் தில் கோவிட்-19 நோய் பாதித்தவர்களின் சளி மாதி ரிகளை பரிசோதனை செய்யும் (RTPCR LAB) பரி சோதனையகம் துவங்கப்பட்டுள்ளது. இதனால், மாதிரிகளை கோவை மாவட்டத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெறுவதில் இருந்த காலதாமதம் இனி தவிர்க்கப்படும். இப் பரிசோதனைகள் மூலம் நாளொன்றுக்கு 150 முதல் 200 சளி மாதிரிகளை பரிசோதிக்க இயலும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.